Monday 25 February 2013

வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்.

(Gen. 1:28–30; 2:16, 17) உடன்படிக்கை என்பது பல வாக்குறுதிகளை உள்ளடக்கிய இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கையாகும். இருபகுதினரும் இந்த உடன்படிக்கையைக்  காத்துக் கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டு , உடன்படிக்கை முறிவடையாமல் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இருவரில் ஒருவரின் செயற்பாட்டால் உடன்படிக்கை முறிவடையும் போது இருபகுதியினரும் பாதிக்கப்படுவார்கள். வேதாகமத்தில் பல உடன்படிக்கைகள் காலத்திற்குக் காலம் ஏற்படுத்தப்பட்டதையும் அதனை மேற்கொண்டு நடந்திருந்தால் ஏற்பட்டிருக்கும்  நன்மைகளையும் அவை முறிவடைந்ததால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் அவதானம் செலுத்துவோமாக.

உடன்படிக்கைமேற்கொள்ளப்பட்டிருந்தால் கிடைத்திருக்கும் நன்மை:
   1 . மரணம் ஏற்பட்டிருக்காது.. நித்திய ஜீவன் ஏற்பட்டிருக்கும்
  1. 2.      ஏதேன்  தோட்டத்திலிருந்துவெளியேற்றப்பட்டிருக்கமாட்டார்கள்.
  2. 3.      பாவம் அற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்திருப்போம்.
  3. 4.      அனுதினமும் தேவனுடன் பேசிக் கொண்டிருந்திருப்போம்.

உடன்படிக்கை முறிவடைந்த்தால் ஏற்பட்ட தீமை  .
  1. 1.      பாவம் ஏற்பட்டது
  2. 2.      ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டமை.
  3. 3.      தேவனுக்கும் மனிதனுக்குமிடையில் தொடர்பற்ற நிலை.
  4. 4.      பிசாசுடன் மனிதனுக்கு தொடர்புகள்  ஏற்பட்டமை.

No comments:

Post a Comment