Monday 18 February 2013

நியாயப்பிரமாணம்:


சமூகத்திற்கு எதிரான குற்றங்கள்- சில குற்றச்ச்செயல்கள் சமூகத்தை முழுவதுமாகப் பாதிக்கின்றது. இலஞ்சம்  வாங்குவதன்மூலம் நீதியைப்புரட்டாதிருப்பாயாக. (யாத். 23: 1-7,  உபாகம்ம் 19:16-21) நீதிபதிகள் யாவரையும் சமனாக நடத்தவேண்டும்  என்றுகட்டளையிடப்பட்டுள்ளார்கள்.
உடலுறவு நன்னடத்தைக்கு எதிரான குற்றங்கள்:- வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள நியாயப் பிரமாணமானது உடலுறவு நன்னடத்தையைப் பாதுகாத்து குடும்ப வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்துகிறது.  இருவர் உடலுறவில் இணைவதன்மூலம் ஒரே மாமிசமாகிறார்கள்,
1. மணமாகாமல் ஆண் பெண்கலவி:- இஸ்றவேலில் ஆண்பெண் உடலுறவில் இணைதல் மிகவும் பரிசுத்தமானது. புதிதாக திருமணம் செய்தபெண்  தனது கணவனைத்   தவிர்ந்த  வேறு ஆணுடன் திருமணத்திற்கு முன்பு  உடலுறவில் ஈடுபட்டால், அது நிரூபிக்கப்பட்டால் அவள் சாகடிக்கபடல் வேண்டும். அந்தக்குற்றச் சாட்டு நிரூபிக்கப்படாவிட்டால், அவளுடைய கணவன் பெரும் தொகைப் பணத்தை குற்றமாக்க் கட்டி, அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளல் வேண்டும். ( உபா. 22:13-21)
2. விபச்சாரம்:- கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி விபச்சாரம் பயங்கரமான குற்றமாகும், சிலவேளைகளில் இந்தக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கொலை செய்யப்படவேண்டும். (லேவி. 20: 10-12, உபாக. 22:22)  திருமணம் நிச்சயிக்கப்பட்ட கன்னிப்பெண் நியாயப்பிரமாணத்தினால்  பாதுகாக்கபடுகின்றாள். நிச்சயிக்கப் படாதவேறு மனிதருடன் உடலுறவில் ஈடுபட்டால் இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள். (உபா. 22: 23-24)
3. ஓரினச் சேர்க்கை :- மிருகத்துடன் புணருதல், அல்லது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுதல் கடுமையாகத்  தடைசெய்யப்படுகின்றது. இது கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி மரணத்திற்கேதுவானது. (லேவி: 20:13)
4. வேசித்தனம்.:-வேசித்தனத்தில் ஈடுபடும் ஆண் அல்லது பெண் கொலை   செய்யப்படக்கடவர்கள்.( ஆதி 38: 24, லேவி. 19: 29, 21:9)
5. தடைவிதிக்கப்பட்ட உறவினருக்கிடையில் ஏற்படும் தகாத கலவி:- ஒருவரின் கிட்டிய உறவினருடன் உடலுறவில் இணைதல் மரணத்திற்கேதுவானது. (லேவி. 20: 11-14)
6. மிருகப்புணர்ச்சி:- மிருகங்களுடன் புணருதல் மரணதண்டனைக்குரியது. (யாத். 22: 19,லேவி 18: 23, உபா. 27: 21)
7. உடைமாறி அணிதல்:- பால்களுக்கிடையிலான வித்தியாசம் அவர்கள் அணியும் உடையினால் அடையாளம்காட்டப்படும். இருந்தும் எதிர்பால் உடைகளை அணிதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
8. தனிப்பட்ட மனிதருக்கு எதிரான குற்றம்:- மற்றவர்களுக்கு எதிரான சட்டவிரோதசெயல்கள் பயங்கரமான குற்றச்செயலாக்க் கருதப்படும். கிழ்காணப்படும் குற்றங்கள் உதாரணமாக்க் காட்ப்படுகின்றன

No comments:

Post a Comment