Wednesday 20 February 2013

நியாயப்பிரமாணம்:


உரியகாலத்திற்குமுன் பிள்ளை பெறுதல்:- ஒரு சண்டையின் போது ஒருபெண் உரியகாலத்திற்குமுன்  பிள்ளை பெறுவதோ அல்லது மரணம் ஏற்பட்டாலோ, அந்தப்பெண்ணை அடித்தவர் மரணத்திற்குள்ளாக்கப்படுவார். இந்த சண்டையின் காரணமாக குறைப்பிரவசம் ஏற்படுமாயின் அற்காக குற்ப்பணத்தை நீதிமன்றத்தீர்ப்பின் பிரகாரம் கட்டல்வேண்டும்.
பலவந்தமாய் கற்பழித்தல் :- திருமணஉறுதிசெய்யப்பட்ட பெண்ணைக் பலவந்தமாய் கற்பழிக்கும் ஒரு நபர் சாகடிக்கப்படக்கடவன். ( உபா. 22: 25—27). ஒருவருக்கும் நியமிக்கப்படாத பெண்ணைக் பலவந்தம் பண்ணிக் கற்பழித்தால் அவன் அதிக பணம்செலவுசெய்யவேண்டும் அத்துடன் திருமண ஏற்பாடும் செய்தல் வேண்டும். தகப்பன் திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்துப் பணத்தைத் தான்வைத்துக் கொள்ள முடியும். அவர் சம்மதம் தெரிவிப்பாராகில் பலவந்தம்பண்ணினவர் திருமணம்செய்யமுடியும், ஆனால் விவாகரத்துக் கோரமுடியாது.( யாத். 22: 16-17, உபா.22.: 28—29). கற்பழிக்கப்பட்ட பெண் நியமிக்கப்பட்ட அடிமையாயிருந்தால், அவளைச் சேர்த்து வைக்கக் கூடாது. அதேநேரம் கற்பழித்தவர் மரணத்திற்கு ஒப்புக் கொடுக்கப்படமாட்டார். ஆனல் கர்த்தருக்கு முன்பாகசெய்த பாவத்திற்காக  குற்றநிவாரணபலி செலுத்தல் வேண்டும்.
கொடுமைப்படுத்தல்.:-தங்கள்உரிமைகளைச் செயற்படுத்த முடியாமலிருப் பவர்களைக் கர்த்தர் பாதுகாக்கின்றார். பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டவேண்டாம். குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் . உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக .யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்த வேண்டாம். செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக. விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக(Ex. 22:21–24; Lev. 19:14, 33; Deut. 24:14; 27:18–19).
பலவந்தமாய்க்கடத்திச் செல்லல்.:- ஒரு மனிதனைக் கடத்திச்சென்று விற்பனைசெய்தல்  அல்லது அவனை அடிமையாகப்பாவிப்பது கடும் குற்றமாகும்.( உபா. 24:7) இந்தத் தடை அந்நியருக்கும் பொருந்தும்.( யாத். 22: 21-24) குருடருக்கும் செவிடருக்கும் பொருத்தமாகும். (லேவி. 19:14) சகல ஜனங்களுக்கும் பொருத்தமானது. ( உபா. 27: 18-19,  )
சொத்துக்களுக்கு எதிராகச்செய்யப்படும் குற்றச் செயல்கள்:- வேதாகமச் சட்டமானது மற்றய நாட்டுச் சட்டங்களைப் போன்றதல்ல, சொத்துக்களைவிட மனித உயிர்கள் பெறுமதிமிக்கவை என கருதுகின்றது. ஆனால் சொத்துக்களை வைத்திருப்பதற்கும் அவற்றை களவு,மோசடி என்பவற்றிலிருந்து பாதுகாப்பதற்கும் அனுமதிக்கின்றது. கீழே கூறப்படும் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளன.
அச்சுறித்திப்பணம்பறித்தலும் கடன்மோசடி செய்தலும்.:- இவ்வாறான குற்றங்களை கர்த்தரின் நியாயப்பிரமாணத்தில் களவகவே கருதப்படுகின்றது. இவற்றிற்கு அதிகபட்ச தண்டனை குற்றமாகக் கொடுக்கப்படுகின்றது. (Ex. 22:1–3; Lev. 6:1–7).
நிறையிலும் படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.:-ஆதிகால இஸ்றவேலர்கள் பணத்திற்கு வியாபாரம் செய்யவில்லை, மாறாக கொடுக்கல்வாங்கல்கள் விலைஉயர்ந்த உலோகங்கள் நிறுத்துக் கொடுக்கப்பட்டன. தவறான அளவுகளைப்பாவித்து ஏமாற்றுவதைக் கர்த்தர் தடைசெய்கின்றார், அதனைக்களவாகவே கருதி அதற்குத் தண்டனை கொடுக்கப்படுகின்றது. (Deut. 25:13–16, Lev. 19:35–36).
தொலைந்த மிருகங்கள்.- பழைய இஸ்ரவேலர்களின் நாட்களில் “ கண்டுபிடிப்போர், பாதுகாப்போர்” அலைந்துதிரந்து காணாமல்போகும் மிருகங்கள் உரிமையாளர்களிடம் திரும்பவும் ஒப்படைத்தல் வேண்டும். உன்னுடைய எதிராளியின் எருது அல்லது கழுதை தொலைந்து போனதை நீ கண்டால் அவற்றை மீண்டும் அவனிடம் கொண்டுவந்துசேர்க்க வேண்டும்.. ,” (Ex. 23:4–5; Deut. 22:1–4).
எல்லைகள்:- நலங்கள் அதன் அளவுகளுக்கேற்ப எல்லைக்குறியிடப்பட்டு அடையாளப்படுத்தப்படும். இந்த எல்லைக்குறிகளை அகற்றுதல் அல்லது மாற்றுதல் கர்த்தரின் சாபத்திற்கேதுவானது. இது அயலவனிடம் களவுசெய்தலுக்கு ஒப்பானது அத்துடன் பெரிய நிலச் சொந்தக்கார்ராகிய கர்த்தருக்கு விரோதமான குற்றச் செயலாகும். (Deut. 19:14; 27:17).

No comments:

Post a Comment